கோவில் அமைவிடம்:
மண்மங்கலம் வெண்டுவன் குல, காரி குல மக்களுக்கு மட்டுமே சொந்தமான குல தெய்வங்களாக அருள்மிகு புதுகாளியம்மன், அருள்மிகு புது சங்கிலி கருப்பண்ணசாமி, அருள்மிகு புது மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. இத்தெய்வங்களுக்கு, கரூர் மாவட்டம்,கரூர் வட்டம், மண்மங்கலம் ஊரில் 1985 ஆம் ஆண்டில் கோயில் கட்டி, வழிபட்டு வருகின்றனர். இத்தலம் கரூர் நகரிலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில், சேலம் நெடுஞ்சாலையில், அமைதியான, பசுமையான சூழலில் அமைந்துள்ளது. இங்கு கோவில் கொண்டிருக்கும் புதுக்காளியம்மன் ,புதுசங்கிலி கருப்பண்ண சாமி கோவிலை குல தெய்வமாக கொண்டவர்கள் சுமார் 400 ஊர்களில் வசித்து வருகின்றனர்.